அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!!
செய்திகள் அநியாயம்..!! 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த தங்கம் விலை..!! அட்டாக் தரும் வெள்ளி விலை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 10:18 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 24 மணி நேரத்திலேயே சவரனுக்கு சுமார் 3,000 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் மட்டும் காலை , மாலை என இரண்டு முறை விலை உயர்ந்தது . இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த ஆண்டின் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னை விலை தான் மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் பின்பற்றப்படுகிறது…
