egg-1764227271

தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்?

  செய்திகள் தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென இப்படி முட்டை விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.புரதச்சத்துக்கு உணவில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் முட்டை உண்ணும் பழக்கமும் உயர்ந்துள்ளது. ஆனால் திடீரென முட்டையின் விலை இப்படி உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் இந்தியாவின் முட்டை தலைநகரம், எனவே இங்கே நிர்ணயம் செய்யப்படும் விலை மாநிலம்…

Read More
pension5-1764221381

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!!

  செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 11:01 [IST] Share This Article மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் பல துறை அதிகாரிகள் உடனும், பல்வேறு நிபுணர்கள், தொழிலாளர் யூனியன்கள் , அமைப்புகளுடனும் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பட்ஜெட்டில் EPS -1995 திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது EPS -1995 என்ற சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நபர் தான் வேலைக்கு செல்ல கூடிய காலத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வைக்கும் பங்களிப்பில் குறிப்பிட்ட தொகை ஓய்வூகாலத்திற்கான ஓய்வூதிய திட்டத்திற்கு சென்றுவிடும்.இதன்படி ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் ஆதரவோடு இந்த…

Read More
wegovyf-1764216640

உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! – Allmaa

  செய்திகள் உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 9:45 [IST] Share This Article இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப உடல் பருமன் மருந்துக்கான சந்தையாகவும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும், எலி லில்லி நிறுவனம் மௌஞ்சாரா என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும் கடந்த ஏப்ரலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. எதிர்பார்த்ததை விட இந்த மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. நீரிழிவு நோய், இதய நோய் பாதிப்பு…

Read More
mag-1764212925

வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொண்டாட்டம்!! இனி சீனாவை சார்ந்திருக்க வேண்டாம்!! ரூ.7,280 கோடியில் மெகா திட்டம்!!

  செய்திகள் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொண்டாட்டம்!! இனி சீனாவை சார்ந்திருக்க வேண்டாம்!! ரூ.7,280 கோடியில் மெகா திட்டம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 8:40 [IST] Share This Article இந்தியாவில் தற்போது வாகன உற்பத்தி மற்றும் மின்னனு சாதனங்கள் , புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தேவைப்படக்கூடிய அரிய வகை காந்தங்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகம் முழுவதுமே இந்த அரியவகை காந்தங்கள் உற்பத்தியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது.அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பல்வேறு நாடுகளை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் அரிய வகை காந்தங்களுக்கு சீனாவை தான் சார்ந்து இருக்கின்றன. சீனாவில் இந்த காந்தங்கள் அதிகமாக இருக்கிறது என்பதோடு மட்டும் இல்லாமல் அவற்றை பிரித்து எடுப்பதற்கான தொழில் நுட்பத்திலும் சீனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்னர் சீனா தங்கள் நாட்டில்…

Read More
vdn-1764158520

1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

  செய்திகள் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 17:32 [IST] Share This Article விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் அங்கே மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்க கூடிய வகையில் தான் மத்திய அரசு பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.1894 கோடி ரூபாய் முதலீட்டில் விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்காவை அமைக்க கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது. இதற்கான ஒப்பந்தமும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா…

Read More
rbi14-1764153842

இந்தியாவில் ரூ.5,000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன? #factcheck – Allmaa

  செய்திகள் இந்தியாவில் ரூ.5,000 நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளதா ரிசர்வ் வங்கி? உண்மை என்ன? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 16:15 [IST] Share This Article இந்தியாவில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது, ஏற்கனவே இருக்கும் நோட்டுகளை மதிப்பிழக்க செய்வது போன்ற முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தான் எடுக்கும். இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் 5000 ரூபாய் நோட்டு வெளியாகப் போகிறது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி நவீனமான முறையில் இந்த 5000 ரூபாய் நோட்டினை வடிவமைப்பு செய்திருப்பதாகவும், அதன் வடிவம் இறுதி செய்யப்பட்டு அச்சிடும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது புழக்கத்திற்கு வரப்போகிறது என்றும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வேகமாக பரவிய வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் இது உண்மையா பொய்யா என்ற…

Read More
tut3-1764155627

தூத்துக்குடியை தேடி வந்து முதலீடு செய்யும் நிறுவனங்கள்!! இளைஞர்களே ரெஸ்யூம் ரெடியா? – Allmaa

  செய்திகள் தூத்துக்குடியை தேடி வந்து முதலீடு செய்யும் நிறுவனங்கள்!! இளைஞர்களே ரெஸ்யூம் ரெடியா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 16:46 [IST] Share This Article தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களின் விருப்பமான முதலீட்டு மையமாக சென்னை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சென்னை விமான நிலைய போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த போக்குவரத்து என ஏற்றுமதி இறக்குமதிக்கான அனைத்து சாதகங்களையும் கொண்டு இருக்கிறது.சென்னை போன்ற ஒரு வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும், முதலீடுகளும் கடல் சார்ந்த இருக்கக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்திலும் உருவாக வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது . தூத்துக்குடியை மிக சிறந்த உற்பத்தி மையமாக அரசு நிலை நிறுத்தி வருகிறது. அந்த வகையில் தான் தமிழ்நாடு அரசின் முயற்சியால் உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தன்னுடைய கார் உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டின் தூத்துக்குடி…

Read More
lay7-1764152118

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம்

  செய்திகள் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 15:46 [IST] Share This Article உலகம் முழுவதும் பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன. அன்றாடம் ஒரு நிறுவனம் பணி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வெரிசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 13 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.அமேசான், ஆப்பிள், ஹெச்பி, இண்டெல் என தொடர்ச்சியாக நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனம் ஒரே அடியாக 13,000 பேரை நீக்குவது என அறிவித்தது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எர்வின்…

Read More
homeloan1-1764140492

வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!!

  வகுப்புகள் வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 12:36 [IST] Share This Article தற்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு வீட்டுக் கடன்கள் தான் அதற்கான நிதி ஆதாரமாக இருக்கின்றன. இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி தான் சொந்த வீடு கனவையே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.வீட்டுக்கடன் வாங்கும் நபர் 20 முதல் 25 ஆண்டு காலத்திற்கு அந்த வீட்டு கடனுக்கான இஎம்ஐ தொகையை மாதம் தோறும் செலுத்தியாக வேண்டும் . பெரும்பாலான நபர்கள் கையில் கணிசமான ஒரு பணம் வந்து விட்டாலே அந்த பணத்தை ப்ரீ பேமெண்ட் செய்துவிடலாம் என்று தான் எண்ணுவார்கள். இதனால் வட்டியில் பெருமளவு குறையும்,…

Read More
tcs20-1764136794

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Share This Article நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அண்மைக்காலமாக ஊழியர்களை சரியான முறையில் நடத்துவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .கடந்த ஜூலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது தொடங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் பணிநீக்கம் என ஒரு எண்ணிக்கையை அறிவித்துவிட்டு மற்ற ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்படுகிறது.பல்வேறு ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் தங்களை மோசமான முறையில் நடத்தி வேலையிலிருந்து…

Read More