phone12-1765940257

Breaking: சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!!

  செய்திகள் சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 8:29 [IST] Share This Article இந்தியாவில் தற்போது செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறலாம். ஒரு வீட்டில் குழந்தைகள் தவிர பெரியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரிடமும் தற்போது செல்போன் இருக்கிறது .ஒரு சிலர் இரண்டு சிம் கார்டுகளை கூட பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் சராசரியாக ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன .மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த சிம் கார்டுகளின் ரீசார்ஜ்களுக்காகவே நம் பட்ஜெட்டில் ஒதுக்கியாக வேண்டி இருக்கிறது. தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 200 ரூபாய் என்ற நிலையில் இருப்பதால் நிச்சயம் 500 லிருந்து 600 ரூபாய் வரை நாம் ரீசார்ஜ் திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.இந்தியாவில் தொலைதொடர்பு…

Read More
amazon4-1765348197

Breaking: இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் இனி AI தான் உங்களோட சக ஊழியர்!! அமேசான் வெளியிட்ட அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 12:01 [IST] Share This Article லாஸ் வேகாஸ், அமெரிக்கா: பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அதிகரித்துவிட்டன. ஏஐ ஏஜெண்டுகள் தான் தற்போது நம்முடைய வேலைகளை படிப்படியாக பறிக்க தொடங்கிவிட்டன.வாடிக்கையாளர் சேவை, கோடிங் , ஹெச்ஆர், என பல வேலைகளும் ஏஐ வசம் சென்று வருகின்றன. இப்படி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அமேசான் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊழியர்கள் ஒரு மென்பொருள் கருவியாக மட்டும் கருதக்கூடாது என தெரிவித்திருக்கும் அமேசான் நிறுவனம் அதை உங்களுடன் வேலை…

Read More
pongalf-1765336867

பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 8:51 [IST] Share This Article தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. மக்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது.அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நடைமுறை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. ஜனவரி மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மக்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். முதல் பொங்கல் பரிசு என்றால் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை தான் வழங்கப்பட்டன.பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குவதும் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2021ஆம் ஆண்டு…

Read More
taxi1-1764760942

ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்?

  செய்திகள் ஓலா, ஊபருக்கு குட் பை!! பயன்பாட்டுக்கு வந்தது பாரத் டாக்ஸி!! மக்களுக்கு என்ன பயன்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 16:53 [IST] Share This Article நம் நாட்டில்டாக்ஸி சேவையில் ஓலா , ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் தான் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக மத்திய அரசு பாரத் டாக்ஸி என்ற டாக்ஸி சேவை வழங்கும் செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது .இந்தியாவின் முதல் கூட்டுறவு டாக்ஸி சேவை தளமாக இந்த பாரத் டாக்ஸி இயங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. முதல் கட்டமாக டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நகரங்களில் இந்த பாரத் டாக்ஸி தன்னுடைய முதல் கட்ட சோதனை ஓட்டத்தை தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு நகரங்களிலும் இந்த சேவைக்கு கிடைக்கும் வெற்றியை தொடர்ந்து இந்தியாவின்…

Read More
scam4-1764731275

வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!!

  செய்திகள் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 8:40 [IST] Share This Article வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் நாம் தெரு தெருவாக சென்று எங்கெல்லாம் டூலெட் போர்டு போட்டு இருக்கிறது என பார்த்து விசாரிப்போம். ஆனால் இப்போதெல்லாம் அந்த அவசியம் கிடையாது. பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவே நாம் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள முடியும்.நம் வீட்டில் அமர்ந்தபடியே எந்த பகுதியில் எவ்வளவு வாடகையில் நமக்கு வீடு வேண்டும் என்பதை உள்ளீடு செய்தாலே குறிப்பிட்ட அந்த ஏரியாவில் அந்த குறிப்பிட்ட தொகைக்கு எத்தனை வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம், வீட்டின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளங்களே நமக்கு காட்டிவிடும். அந்த வகையில் வாடகைக்கு வீடு தேடுவது எளிமையானதாக மாறியிருக்கிறது.…

Read More
vdn-1764158520

1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

  செய்திகள் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 17:32 [IST] Share This Article விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் அங்கே மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்க கூடிய வகையில் தான் மத்திய அரசு பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.1894 கோடி ரூபாய் முதலீட்டில் விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்காவை அமைக்க கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது. இதற்கான ஒப்பந்தமும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா…

Read More
lay7-1764152118

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம்

  செய்திகள் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ஊழியர்கள் தான் நிறுவனத்தின் இதய துடிப்பு: Verizon CEO உருக்கம் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 15:46 [IST] Share This Article உலகம் முழுவதும் பல டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் இருக்கின்றன. அன்றாடம் ஒரு நிறுவனம் பணி நீக்கம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறது. அமெரிக்காவை சேர்ந்த வெரிசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 13 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.அமேசான், ஆப்பிள், ஹெச்பி, இண்டெல் என தொடர்ச்சியாக நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனம் ஒரே அடியாக 13,000 பேரை நீக்குவது என அறிவித்தது அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வெரிசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான எர்வின்…

Read More
homeloan1-1764140492

வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!!

  வகுப்புகள் வீட்டு கடன் Pre-payment பண்ண போறீங்களா? – இந்த டிரிக் ஃபாலோ பண்ணா ரூ.40 லட்சம் வரை சேமிக்கலாம்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 12:36 [IST] Share This Article தற்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு வீட்டுக் கடன்கள் தான் அதற்கான நிதி ஆதாரமாக இருக்கின்றன. இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி தான் சொந்த வீடு கனவையே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.வீட்டுக்கடன் வாங்கும் நபர் 20 முதல் 25 ஆண்டு காலத்திற்கு அந்த வீட்டு கடனுக்கான இஎம்ஐ தொகையை மாதம் தோறும் செலுத்தியாக வேண்டும் . பெரும்பாலான நபர்கள் கையில் கணிசமான ஒரு பணம் வந்து விட்டாலே அந்த பணத்தை ப்ரீ பேமெண்ட் செய்துவிடலாம் என்று தான் எண்ணுவார்கள். இதனால் வட்டியில் பெருமளவு குறையும்,…

Read More
tcs20-1764136794

மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!!

  செய்திகள் மீண்டும் வேலையை காட்டும் டிசிஎஸ்!! வேலையை விட்டு அனுப்புவதற்காகவே தேர்வு நடத்துவதாக புகார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 11:31 [IST] Share This Article நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அண்மைக்காலமாக ஊழியர்களை சரியான முறையில் நடத்துவதில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன .கடந்த ஜூலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது தொடங்கி டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் தொடர்ச்சியாக புகார்களை முன் வைத்த வண்ணம் இருக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக ஊழியர்கள் பணிநீக்கம் என ஒரு எண்ணிக்கையை அறிவித்துவிட்டு மற்ற ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் முன்வைக்கப்படுகிறது.பல்வேறு ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் டிசிஎஸ் தங்களை மோசமான முறையில் நடத்தி வேலையிலிருந்து…

Read More
goldf43-1764132618

2 நாட்களில் சவரனுக்கு ரூ.2000க்கு மேல் உயர்ந்த தங்கம்.. மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்றதா தங்கம்? – Allmaa

  செய்திகள் 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2000க்கு மேல் உயர்ந்த தங்கம்.. மீண்டும் ஏறுமுகத்திற்கு சென்றதா தங்கம்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 10:22 [IST] Share This Article சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து இருக்கிறது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்தது, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 11520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைந்ததால் இந்த வாரம் முழுவதும் இதே போன்ற ஒரு போக்குதான் நீடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது . அதே விலை உயர்வு இன்றும் நீடிக்கிறது என்பதால் இனி தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருக்குமோ என்ற சந்தேகம்…

Read More