Breaking: ஓய்வு காலத்திற்கு ரூ.1 கோடி போதுமா? வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற சிறந்த வழி எது?
பர்சனல் பைனான்ஸ் ஓய்வு காலத்திற்கு ரூ.1 கோடி போதுமா? வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற சிறந்த வழி எது? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 14:52 [IST] Share This Article இத்தனை காலமும் பிள்ளைகளுக்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஓயாமல் உழைத்து விட்டோம். கடமைகள் முடிந்து, இப்போதுதான் நமக்காக வாழப்போகும் பொற்காலம் தொடங்கியிருக்கிறது. அந்த பொற்காலத்தை எவர் உதவியுமின்றி, சுயமரியாதையுடனும் நிம்மதியுடனும் கழிக்க வேண்டும் என்பதே ஓய்வு காலத்தை எட்டும் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு.நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த 1 கோடி ரூபாய் என்பது வெறும் சேமிப்பு அல்ல, அது உங்கள் முதுமைக் காலத்தின் ஊன்றுகோல். 2026-ன் தற்போதைய விலைவாசி உயர்வில், அந்தப் பணத்தை பீரோவில் வெறுமனே பூட்டி வைத்திருந்தால் அதன் மதிப்பு குறையக்கூடும். ஆனால் அதை சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால், அதுவே உங்களுக்கு ஒவ்வொரு மாதமும்…
