magalir-1765275678

மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 9, 2025, 15:53 [IST] Share This Article தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் விடுபட்டவர்கள் ஜூலை மாதம் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது .ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும்…

Read More
mdu-1765104070

மதுரைக்காக தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!! தரமான சம்பவம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!! – Allmaa

  செய்திகள் மதுரைக்காக தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!! தரமான சம்பவம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 16:12 [IST] Share This Article மதுரை: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி, ஓசூர், கோவையை தொடர்ந்து மதுரையில் TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டில் 50000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35,560.15 கோடி ரூபாய் முதலீட்டில் 52,060 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம். ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்…

Read More
ril-1765093980

தமிழ்நாட்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கும் ரிலையன்ஸ்!! அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!! – Allmaa

  செய்திகள் தமிழ்நாட்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கும் ரிலையன்ஸ்!! அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 13:24 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பெரிய அளவிலான நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. வாகன உற்பத்தி, வாகன உதிரி பாக உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்கள் , தோல் பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி என தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாடு அரசு மற்ற துறைகளிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை தொழில் மையமாகவும் உற்பத்தி மையமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகளின் பலனாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.மதுரையில் இன்று நடைபெற்ற TN Raising முதலீட்டாளர்கள் மாநாட்டில்…

Read More
train17-1765084003

இண்டிகோவால் கைவிடப்பட்ட பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய ரயில்வே: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

  செய்திகள் இண்டிகோவால் கைவிடப்பட்ட பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய ரயில்வே: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 10:38 [IST] Share This Article நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது . இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் தங்களுடைய பயணத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் இண்டிகோ விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு என இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது .இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக முக்கிய வழித்தடங்களில் 84 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்திருக்கிறது. சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன . தென்னக ரயில்வேயும் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.விமானிகள், விமான பணியாளர்களுக்கான பணி நேர கட்டுப்பாடு தொடர்பாக டிஜிஏஐ கொண்டு வந்த…

Read More
bill3-1765076932

லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!!

  செய்திகள் லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 8:41 [IST] Share This Article டெல்லி: இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது விடுமுறை நாட்களிலும் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் மேலாளர்கள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் அலுவலக ரீதியான விஷயங்களுக்காக போன் செயவது அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவது.தனியார் நிறுவனங்களில் அலுவலக நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருந்தாலும் அதனை முடித்துவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பிய பின்னரும் மேனேஜர்கள் பணி ரீதியாக போன் கால் செய்வது என்பது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் ஆளாகின்றனர். விடுமுறை நாளில் குடும்பத்தினருடன்…

Read More
indigo-1765003829

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!!

  செய்திகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!! News oi-Vignesh Rathinasamy By Vignesh Rathinasamy Published: Saturday, December 6, 2025, 12:21 [IST] Share This Article இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நாடு முழுவதும் விமானங்களின் இயக்கம் குழப்பத்தில் உள்ளது. இந்தக் குழப்பம் இப்போது 5-வது நாளாக தொடரும் நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பயணச் சீட்டுகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.இண்டிகோ நிறுவனம், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அடுத்த சில நாட்களிலும் விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாம் என்று அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து செல்லும் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளையும் இண்டிகோ ரத்து செய்தது.…

Read More
wed2-1764934460

இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!! – Allmaa

  செய்திகள் இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 17:07 [IST] Share This Article நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிரதான விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.அண்மையில் மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது . இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இண்டிகோ நிறுவனம் தன்னுடைய நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்று கணக்கிலான விமானங்கள் தாமதம் ஆகியிருக்கின்றன . மருத்துவ…

Read More
perplexity-1764936996

Breaking: Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!!

  செய்திகள் Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, December 5, 2025, 17:48 [IST] Share This Article உலகின் மிகப்பெரிய புட்பால் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைத்தளத்தில் எந்த அளவுக்கு பிரபலம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை. ஒவ்வொரு போஸ்ட்-க்கும் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பல பிராண்டாகளுக்கும் அம்பாசிட்டராகவும் உள்ளார்.இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஒரு டெக் நிறுவனம், அதுவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.2022ல் துவங்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தில்கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். பெர்ப்ளெக்சிட்டி தற்போது ஏஐ துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது, குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும்…

Read More
gold-2025-12-05t131750-375-1764920968

தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!! – Allmaa

  செய்திகள் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 13:21 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் தந்தது . 2026 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு போலவே தங்கத்தின் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு மிகப் பரவலாக இருந்திருக்கிறது .உலக தங்க கவுன்சில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எந்த உச்சம் வரை தொடும் என்ற கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. உலக தங்க கவுன்சில் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை போக்கை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான தங்கம் விலை குறித்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறது . தற்போது…

Read More
jobf4-1764917236

அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

  செய்திகள் அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 12:19 [IST] Share This Article டெல்லி: பெரும்பாலான இந்திய குடும்பங்களின் கனவு எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான். குறிப்பாக ரயில்வே துறையில் எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர்.ரயில்வே வேலைகளுக்காக தயாராகி வரக்கூடிய நபர்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இந்திய ரயில்வேயில் 1,20,579 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது.மக்களவையில் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி…

Read More