1766832139

Breaking: மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா?

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: மேல்முறையீடு செய்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்படுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 27, 2025, 16:14 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் அண்மையில் தான் விரிவாக்கம் செய்யப்பட்டது.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்த பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிகள் இருந்தும் விடுபட்டதாக எண்ணக்கூடிய பெண்கள் மேல்முறையீடு செய்தால் நிச்சயம் அவர்களின் பெயரும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் எனக் கூறியிருக்கிறார் .இதனை அடுத்து…

Read More
pongal6-1766825512

ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!

  செய்திகள் ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 27, 2025, 14:24 [IST] Share This Article தமிழ்நாடு மக்கள் உற்சாகமாக கொண்டாட கூடிய பண்டிகை தான் பொங்கல் . தை முதல் நாளில் அனைவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று புது பானையில் பொங்கலிட்டு குடும்பத்தோடு உண்டு மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகை என்பது தை முதல் நாளோடு நின்று விடுவது கிடையாது. இரண்டாவது நாள் மாட்டுப்பொங்கல் அடுத்ததாக காணும் பொங்கல் என குடும்பத்தினரோடு கொண்டாடி மகிழக்கூடிய ஒரு பண்டிகையாக பொங்கல் பண்டிகை தொடர்ந்து இருந்து வருகிறது .அண்மைக்காலமாக பொங்கல் பண்டிகை என்றாலே ரேஷன் கடைகளில் வழங்கப்படக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்து விடுகிறது . ஏனெனில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை வாயிலாக பொங்கல் பரிசு…

Read More
hosur12-1766658213

Breaking: ஓசூர் விமான நிலைய திட்டம்: ஜெட் வேகத்தில் தமிழக அரசு! நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!!

  செய்திகள் ஓசூர் விமான நிலைய திட்டம்: ஜெட் வேகத்தில் தமிழக அரசு! நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 15:55 [IST] Share This Article கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையத்தை அமைத்து விட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு ஜெட் வேகத்தில் செயல்படுகிறது . ஓசூர் – சூளகிரி தாலுகாவில் பேரிகை என்ற இடத்தில் விமான நிலையத்தை அமைப்பதற்கான இடமாக தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்துள்ளது.இந்த பகுதியில் 2980 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையத்தை கட்டமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது .ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில் ஓசூர் விமான நிலையத்தை கட்டுவது என்றும் பெங்களூரு மக்களையும் ஈர்க்கக் கூடிய வகையில் இந்த விமான நிலையம் அமைய வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருந்து வருகிறது.இதற்காக தான்…

Read More
gold-2025-12-25t132942-860-1766649595

ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்தை ரூ.1.7 லட்சமாக மாற்றிய முதலீடு!! இப்போ கூட முதலீடு பண்ணலாம்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 13:31 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறும் அளவிற்கு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டி இருக்கிறது. சில்லறை விற்பனையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்து விட்டது . 2025 தொடங்கிய போது தங்கத்தின் விலை இவ்வளவு உயரும் என யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் .தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றே கூறலாம். பங்குச்சந்தை, பத்திரங்கள் எல்லாம் பக்கத்தில் கூட வர முடியாது என கூறும் அளவுக்கு இந்த முதலீடு பெரிய லாபம் தந்துள்ளது. தங்கத்தில் முதலீடு என்றால் தங்கத்தை நகையாக வாங்குவது…

Read More
jon-1766641285

ரயில்வே வேலை தான் உங்களோட கனவா? 22,000 காலி பணியிடங்களை நிரப்பும் இந்திய ரயில்வே!!

  செய்திகள் ரயில்வே வேலை தான் உங்களோட கனவா? 22,000 காலி பணியிடங்களை நிரப்பும் இந்திய ரயில்வே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 11:13 [IST] Share This Article மத்திய அரசு பணிகளில் ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு மக்களிடம் எப்பொழுதுமே மவுசு அதிகம் . எப்படியாவது ரயில்வேயில் ஒரு வேலை வாங்கி விட்டால் வாழ்க்கை செட்டிலாகிவிட்டது என லட்சக்கணக்கானவர்கள் பாடுபடுகின்றனர்.ரயில்வே வேலை என்றாலே கை நிறைய சம்பளம், தங்குவதற்கு குடியிருப்பு, பண்டிகை கால போனஸ், பயண சலுகைகள் ஆகியவை கிடைக்கின்றன. இதனால் தான் இந்த வேலைகளுக்கு போட்டி அதிகம். அப்படி ரயில்வேயில் எப்படியாவது ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என காத்திருப்பவர்களுக்காகவே ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலி பணியிடங்களை ஆர்ஆர்பி எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் தான் நிரப்பி வருகிறது . அந்த…

Read More
voter-1766643997

வாக்காளர் பட்டியல்ல உங்க பெயர் இல்லையா? இந்த தேதிகள்ல முகாம் நடக்குது குறிச்சு வச்சிக்கோங்க!! – Allmaa

  செய்திகள் வாக்காளர் பட்டியல்ல உங்க பெயர் இல்லையா? இந்த தேதிகள்ல முகாம் நடக்குது குறிச்சு வச்சிக்கோங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 12:01 [IST] Share This Article சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது . இந்த சூழலில் அண்மையில் தேர்தல் ஆணையம் சார்பாக தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது . மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஸ்ஐஆர் பணிகளின் போது இறந்தவர்களின் பெயர்கள், இரட்டை பதிவு, சரியான முகவரி இல்லாமல் இருந்தது என பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி இருக்கிறது . ஆனால்…

Read More
dec-1766637613

மக்களே இதை எல்லாம் முடிக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள்!! முதல்ல இந்த Checklist பாருங்க!!

  செய்திகள் மக்களே இதை எல்லாம் முடிக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள்!! முதல்ல இந்த Checklist பாருங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 25, 2025, 10:12 [IST] Share This Article 2025ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம், புது ஆண்டு பிறக்க போகிறது. இந்த புது ஆண்டில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சீராக செல்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சில முக்கியமான பணிகளை மக்கள் முடித்தாக வேண்டும்.டிசம்பர் 31ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட இந்த வேலைகளை முடிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டில் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது . எனவே நீங்கள் இந்த வேலைகளை எல்லாம் பெண்டிங் வைத்திருந்தால் முதல் வேலையாக அவற்றை முடித்துவிட்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுங்கள்.ரேஷன் கேஒய்சி: மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் அரிசி, கோதுமை, பருப்பு…

Read More
andhraf-1766567020

100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா?

  செய்திகள் 100 கோடினா சும்மாவா!! சந்திரபாபு நாயுடு அதிரடி!! மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை அறிவிப்பாரா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 24, 2025, 14:35 [IST] Share This Article அமராவதி: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக்கூடிய ஒரு அதிரடியான திட்டத்தை வெளியிட்டு இருக்கிறார் . ஆந்திர மாநிலத்தவர்களை அறிவியல் துறையில் தங்களுடைய ஆய்வுகளை தீவிர படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு அமைந்திருக்கிறது.ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றது முதலே மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பது ,அமராவதியை உலகத்தரம் வாய்ந்த ஒரு நகரமாக உருவாக்குவது என்பதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . அந்த வகையில் அமராவதி நகரத்தை குவாண்டம் தொழில்நுட்பதற்கான உலக மையமாக மாற்ற வேண்டும் என்பதில்…

Read More
anbil-1766555238

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

  செய்திகள் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறதா?அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 24, 2025, 11:19 [IST] Share This Article பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பச்சரிசி உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கியது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை…

Read More
ration1-1766474322

Breaking: உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

  செய்திகள் உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 23, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் அரிசி ,பருப்பு, கோதுமை , சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் தான் கிடைக்கின்றன. மாதம் தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தங்களுடைய உணவு தேவையை போக்கிக் கொள்ளக்கூடிய லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன . முன்னுரிமை குடும்ப அட்டை இதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் .முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். அடுத்ததாக அரிசி அட்டை,…

Read More