பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு?
செய்திகள் பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 10, 2025, 8:51 [IST] Share This Article தமிழ்நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. மக்கள் உற்சாகமாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது.அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நடைமுறை திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. ஜனவரி மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் மக்கள் தங்களின் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம். முதல் பொங்கல் பரிசு என்றால் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்டவை தான் வழங்கப்பட்டன.பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்குவதும் அதிமுக ஆட்சியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. 2021ஆம் ஆண்டு…
