வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!!
செய்திகள் வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 8:40 [IST] Share This Article வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் நாம் தெரு தெருவாக சென்று எங்கெல்லாம் டூலெட் போர்டு போட்டு இருக்கிறது என பார்த்து விசாரிப்போம். ஆனால் இப்போதெல்லாம் அந்த அவசியம் கிடையாது. பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவே நாம் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள முடியும்.நம் வீட்டில் அமர்ந்தபடியே எந்த பகுதியில் எவ்வளவு வாடகையில் நமக்கு வீடு வேண்டும் என்பதை உள்ளீடு செய்தாலே குறிப்பிட்ட அந்த ஏரியாவில் அந்த குறிப்பிட்ட தொகைக்கு எத்தனை வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம், வீட்டின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளங்களே நமக்கு காட்டிவிடும். அந்த வகையில் வாடகைக்கு வீடு தேடுவது எளிமையானதாக மாறியிருக்கிறது.…
