Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

  செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

News oi-Devika Manivannan By Published: Friday, November 14, 2025, 17:54 [IST] Share This Article

இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

நிதி சட்டம் 2025 இன் ஓய்வூதியதாரர்களுக்கு இனி சம்பள கமிஷன் பலன்கள் கிடைக்காது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது .இத்தகைய சூழலில் மத்திய அரசின் பிஐபி உண்மை கண்டறியும் குழு இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் முக்கியமான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறது .

Also Readதேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!!

அதாவது சமூக வலைதளங்களில் ஒரு தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாட்ஸ் அப்பில் பரவக்கூடிய செய்தியில் மத்திய அரசு ஓய்வு கால பலன்கள் , அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பரிந்துரைப்படி ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்டவற்றை நிதி சட்டம் 2025 இன் படி நீக்கிவிட்டது என ஒரு தகவல் பரவி வருகிறது இது போலியான செய்தி என குறிப்பிட்டு இருக்கிறது .

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சம்பள கமிஷனின் பலன்கள் கிடைக்காதா ? என்ற தலைப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப்பில் வரக்கூடிய தகவல்களை நம்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது . ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்களில் எந்தவித மாற்றத்தையும் அரசு கொண்டுவரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Recommended For Youபீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!

2021 ஆம் ஆண்டு மத்திய அரசு தன்னுடைய ஓய்வூதிய பலன்களுக்கான சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒரு பொதுத்துறை நிறுவன ஊழியர் தவறான செயல்களுக்காக வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தால் அவருக்கான ஓய்வு கால பலன்கள் ரத்து செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . இதனை தவறான முறையில் திரித்து தற்போது போலியான தகவலாக பகிர்கிறார்கள் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழக்கம் போலவே அகவிலைப்படி உயர்வு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு ஆகியவை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

Share This Article English summary

Has Government scrapped the DA hike & CPC benefits to pensioners? #factcheck

A WhatsApp message claims the central government has scrapped post-retirement benefits like DA hikes and Pay Commission revisions for pensioners is not true. Story first published: Friday, November 14, 2025, 17:54 [IST] Other articles published on Nov 14, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *