Breaking: 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!
செய்திகள் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 11:51 [IST] Share This Article பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய GCC எனப்படும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் அதாவது பன்னாட்டு திறன் மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஐடி துறையையே மிஞ்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக ஜிசிசி உருவாகி இருக்கிறது. 2029 -2030-ம் ஆண்டுக்குள் இந்த ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் 28 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரையிலான வேலை…
