8ஆவது சம்பள கமிஷன்: பல லட்சங்களை பெற போகும் அரசு ஊழியர்கள்!! இந்த கணக்கு தான் முக்கியம் பாஸ்!!

paycom-1771845669

  செய்திகள்

8ஆவது சம்பள கமிஷன்: பல லட்சங்களை பெற போகும் அரசு ஊழியர்கள்!! இந்த கணக்கு தான் முக்கியம் பாஸ்!!

News oi-Devika Manivannan By Published: Monday, February 23, 2026, 16:52 [IST] Share This Article

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து புதிய சம்பளம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசு சம்பள கமிஷன் அமைப்பதையே தாமதப்படுத்தி விட்டது. இதனால் சம்பளக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவது அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை தாமதமாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 8ஆவது சம்பள கமிஷனே நவம்பர் மாதம் தான் அமைக்கப்பட்டது என்பதால் அடுத்த 18 மாதங்கள் கழித்து தான் ஊதிய உயர்வு சம்பந்தமான பரிந்துரைகளை வழங்கும். எனவே எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் கிடைப்பதற்கு 2028 ஜனவரி வரை தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆவது சம்பள கமிஷன்: பல லட்சங்களை பெற போகும் அரசு ஊழியர்கள்!! இந்த கணக்கு தான் முக்கியம் பாஸ்!!

ஏனெனில் சம்பள கமிஷன் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தாலும் அரசு அதனை ஆய்வு செய்து செயல்படுவதற்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் 2028 ஆம் ஆண்டு ஜனவரி 1 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பவ கமிஷன் அடிப்படையில் சம்பளம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. இது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி இருக்கிறது. சம்பள கமிஷன் தாமதமானாலும் இந்த தாமதமான அனைத்து மாதங்களுக்குமான சம்பள பாக்கி கணக்கிடப்பட்டு அரியர் தொகையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லிருந்து 35 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வை பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

Also Readரூ.5000 மகளிர் உரிமை தொகையை விட பெரிய ஜாக்பாட் காத்திருக்கு!! தமிழ்நாட்டு பெண்களே ரெடியா இருங்க!! ரூ.5000 மகளிர் உரிமை தொகையை விட பெரிய ஜாக்பாட் காத்திருக்கு!! தமிழ்நாட்டு பெண்களே ரெடியா இருங்க!!

பணவீக்கம், அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு, வாழ்க்கை செலவினம் உள்ளிட்டவற்றை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஃபிமண்ட் ஃபேக்டர் என்பதை கணக்கிட்டு தான் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். பொதுவாக சம்பள உயர்வு வந்தவுடன் எத்தனை மாதங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை வழங்கப்பட வேண்டுமோ அது அரியர் தொகையாக வழங்கப்படும். இத்தனை ஆண்டுகளாக பின்பன்ற்றப்படும் இதே நடைமுறை 8ஆவது சம்பள கமிஷனிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

Recommended For Youதமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? – பெண்களே உங்க கையில தான் எல்லாமே இருக்கு!!தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? – பெண்களே உங்க கையில தான் எல்லாமே இருக்கு!!

எனவே சம்பள உயர்வு தாமதம் ஆனாலும் அரசு ஊழியர்களுக்கு பெரிய தொகை கணக்கில் விழப்போவது உறுதி. இந்த அரியர் தொகையை கணக்கிடுவது மிகவும் எளிது. அதாவது ஊழியரின் பழைய அடிப்படை சம்பளம், புதிதாக முன்மொழிந்த அடிப்படை சம்பளம் இரண்டிற்கும் இடையே இருக்கக்கூடிய வேறுபாட்டை கணக்கிட வேண்டும். இந்த வேறுபாடு எத்தனை மாதங்களுக்கு ஊழியருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கணக்கிட வேண்டும். அதாவது இந்த வேறுபாடு தொகையும் சம்பள உயர்வு நிலுவையில் உள்ள மாதங்களின் எண்ணிக்கையும் பெருக்கினால் வரக்கூடியது தான் அரியர் தொகை.

உதாரணமாக ஒரு அரசு ஊழியருக்கு அடிப்படை சம்பளம் தற்போது 30 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது, அது 45 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது என வைத்துக் கொண்டால் பழைய சம்பளத்திற்கும் புதிய சம்பளத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் 15 ஆயிரம் ரூபாய். 24 மாதங்களுக்கு சம்பள கமிஷம் தாமதம் ஆகிறது என்றால் அரியர் தொகையே 3.6 லட்சம் ரூபாயாக கிடைக்கும்.

Share This Article English summary

8th Pay Commission: How much arrears central govt staffs may receive?

As the implementation of 8th Pay Commission delays, officials are saying that the employees will receive the arrears amount. Here is how much an employee may receive? Story first published: Monday, February 23, 2026, 16:52 [IST] See More On: 8th pay commission, da, government employees, அகவிலைப்படி, சம்பள கமிஷன் Other articles published on Feb 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *